பக்கம்:பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை 1 - 29 பிள்ளையாருக்கு எல்லோரும் சொந்தம். பிள்ளையாரும் எல்லோருக்கும் சொந்தம். ஏழை எளியவருக்கும், சாஸ்திரம் படிக்காத சாமானிய ஜனங்களுக்கும் கூடச் சொந்தம். மற்ற ஸ்வாமிகளின் நைவேத்திய விநியோகத்தில் பெரிய மதுஷ்யர்களுக்குத்தான் முதலிடம். பிள்ளையாரோ தமக்குப் போடுகிற சிதறுகாய் இவர்களுக்குப் போகாமல் ஏழைக் குழந்தைகளுக்கே போகும்படியாக வைத்துக் கொண்டிருக்கிறார்: எல்லோரும் "அகவல் ” சொல்லி அவரை வழிபட வேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதில் அதிக உரிமை உண்டு. அவ்வை பெண்ணாகப் பிறந்ததால், பெண்கள் எல்லோருக்கும் அவளுடைய இந்த ஸ்தோத்திரதில் பாத்தியதை ஜாஸ்தி. அவள் குழந்தைகளுக்கு உபதேசித்த பாட்டி விநாயகரும் குழந்தைத் தெய்வம். அதனால் அவளுடைய அகவலைக் குழந்தைகள் யாவரும் அவர்முன் பாடி ஸ்மர்ப்பிக்க வேண்டும். கொஞ்சம் கடமுட' என்றிருக்கிறதே. அர்த்தம் புரியவில்லையே என்ற பார்க்க வேண்டாம். அர்த்தம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் 'அவ்வையின் வாக்குக்கே நன்மை செய்கிற சக்தி உண்டு என்று நம்பி அகவலை பொட்டை நெட்டுருப் போட்டுச் சொன்னாலும் போதும், அதனால் கூேடிமம் உண்டாகும். அழகான பெட்டி ஒன்று கிடைக்கிறது. அதற்குள் நிறைய ரத்தினங்கள் இருக்கின்றன. ஆனாலும் பெட்டியைத் திறக்கச் சாவியைக் காணோம். அதனால் பெட்டி வேண்டாம் என்று விட்டு விடுவோமா?"சாவி கிடைக்கிறபோது கிடைக்கட்டும்” என்று பெட்டியை வைத்துக் கொள்வோம் அல்லவா? இப்போது பெட்டியை விட்டுவிட்டால் பிறகு சாவி கிடைத்தாலும் பிரயோஜனமில்லையே விநாயகர் அகவல் அப்படிப்பட்ட அழகான பெட்டி அதற்குள்ளே யோக சாஸ்திர விஷயங்கள் ரத்தினம் மாதிரி உள்ளன. புத்தி (சாவி) இப்போது நம்மிடம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இப்போதே பிடித்து அதைச் சொல்லிக் கொண்டிருப்போம். சொல்லச் சொல்ல தானே அர்த்தமும் புரிய ஆரம்பிக்கும். பிள்ளையாரே அது புரிவதற்கான அதுக்கிரஹத்தைச் செய்வார். பிள்ளையார் எல்லாருக்கும் நல்லவர் எல்லோருக்கும் வேண்டியவர் சொந்தம். சிவ சம்பந்தமான லிங்கம், அம்பாள், முருகன் முதலிய விக்கிரஹங்களைப் பெருமாள் கோயிலில் பார்க்க முடியாது. ஆனால், பிள்ளையாரும் சிவகுடும்பத்தை சேர்ந்தவர்தான் என்றாலும், விஷ்ணு ஆலயங்களில்கூடப் பிள்ளையார் மட்டும் இருப்பார். தும்பிக்கை ஆழ்வார் என்று அவருக்குப் பெயர் சொல்லுவார்கள். மதச் சண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் அவர்.