பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


5
கார்த்திகேயன் கனவு

[பேராசிரியர் கல்கி அவர்கள் எழுதிய பார்த்திபன் கனவுக்கு
இந்தக் கார்த்திகேயன் கனவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கும்
என்று எண்ணி வாசகர்கள் மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.]

இரவு மணி எட்டே கால். திருவனந்தபுரம் மெயில் எழும்பூர் ஸ்டேஷனை விட்டுப் புறப்பட்டது.

ஒடுகிற ரெயிலில், ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்பு மெத்தையொன்றில் சுகமாகப் புரண்டுகொண் டிருந்த சேகரின் உள்ளத்தில் எண்ணங்களும் உருண்டு புரண்டுகொண்டிருந்தன.

இப்போது அவன் எஸ். எஸ். எல். ஸி. பாஸாகி விட்டான். அதனால் இனிமேலும் அவனே அவனுடைய