பக்கம்:பிள்ளையார் சிரித்தார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

பின்புதான் தெரிய வந்தது, அவர் வாங்கிய நிலத்தில் அப்பழுக்கு இல்லை என்று.

பணம் ஆயிரம் ரூபாயைக் கார்த்திகேயன் பொருட்படுத்தவே இல்லை; ஆனால், பாஷை தெரியாத காரணத்தால்-படிக்காத குறையினால், ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்கிற தாழ்வு உணர்ச்சி, அவரது உள்ள்த்தில் பலமான அடியாக விழுந்துவிட்டது.

அதனால், தம்முடைய குடும்பத்தில் ஒருவனேயாவது பட்டப்படிப்புப் படிக்க வைத்துப் பார்க்காமல் கண் மூடுவதில்லை என்று வைராக்கியம் எடுத்துக்கொண்டு விட்டார்.

கார்த்திகேயன் பிள்ளையினுடைய ஐம்பதாவது வயதில் அருமையாகப் பிறந்த ஒரே மகன் சேகர். அவனைத் தவிர அதற்கு முன்பு அவருக்கு ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை. ஆகவே, அவருடைய ஆசைகள் நம்பிக்கைகள் எல்லாம் சேகர் ஒருவனிடமே இருந்தன.

அவன் அடுக்கடுக்காய்ப் படித்துப் பெரிய பட்டம் பெற, கிராமத்துச் சூழ்நிலையை மறக்க வேண்டும் என்று எண்ணினர். அதற்காக வேண்டியே அவர் பட்டணத்தில் ஒரு பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி, சமையலுக்கும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆட்களைத்துனைக்கு அனுப்பி ஏற்பாடு செய்தார்.

சேகரும் தந்தையின் விருப்பத்தைப் பூாத்தி செய்யும் விதத்திலேயே நன்றாகப் படித்து - அந்த வருஷம் எஸ். எஸ். எல். ஸி. பரீட்சையும் பாஸாகிவிட்டான்.

ஆனால், ஒவ்வொரு வருஷமும் ஊருக்கு வந்த போதெல்லாம், அழகிய அந்த வீட்டிலுள்ள ஓர் அறை மட்டும் எப்போதும் பூட்டியே இருக்கிற காரணத்தை அறிய, சேகர் எவ்வளவோ பிடிவாதம் பிடித்ததுண்டு.

பி-சி. -3