பக்கம்:பிள்ளை வரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઈ ன் இ ன் அவன் ஒரு சக்கிலிப் பையன்; பன்னிரண்டு வயதிருக்கும். பெரியநாயக்கன்பாளையத்தில் ஒரு பண்ணையில் மாடு மேய்ப்பது அவன் வேலை. சின்குனுடைய இளைய உள்ளத்தில் இரண்டு. ஆசைகள் குடிகொண்டிருந்தன. ரயில் ஏதுவது ஒன்று; கோயம்புத்துசர் சென்று சினிமாப் பார்ப்பது மற்ருென்து. அவன் மாடுகளே மேய்த்து வந்த புலம் ரயில் பாதையை அடுத்திருந்தது; அதுவே அவன் முதல் ஆசைக்குக் காரணம். சின்ஞன் அதிகாலேயில் சாணி இயடுத்துத் தொழுவத்தைச் சுத்தம் செய்து விடுவான். அ த த் கு ப் பிறகு பண்ணுடி வந்து பால் கறந்து கொண்டு போவார். உடனே அவன் மாடுகளே ஒட்டிக்கொண்டு மேய்க்கச் செல்லு வான். பொழுது சாயும் வரையில் அவன் மாடு களோடு காட்டிலேயே இருப்பான். ரயில்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அவற். றைச் சின்னுன் ஆவலோடு பார்ப்பான். எஞ்சின் புகை விடும்போது அவனும் குப் குப் என்று: சொல்லிக்கொண்டு கைகளே முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டு ஒடத் தொடங்கி விடுவான். நீலகிரி எக்ஸ்பிரலைக் கவனித்துக் கொண்டிருப்பதில் அவனுக்கு அலாதியான ஆசை உண்டு. அந்த ரயில் பூதம்போல வருவதைக் கண்டு அவன் குதித்துக் கூத்தாடுவான்; ஒவ்வொரு சமயம் இமை கொட் டாமல் பார்த்து ர யி ல ரு .ே க நின்துகொண் டிருப்பான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/113&oldid=825014" இலிருந்து மீள்விக்கப்பட்டது