பக்கம்:பிள்ளை வரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னே வரம் #f த்துசாமிக் கவுண்டர் மனைவியுடன் ஸ்தல யாத் திரையாக வந்திருக்கிரு.ர். : அவர் தட்டுப்பாளையத்தில் பெரியபணக்காரர். பணக்காரரென்ருல், "காடு வா, வா" என்கிற பருவமாயிருந்தாலும் பெண் கொடுப்பவர் நான் முந்தி நீ முந்தி என்று வருவார்கள் அல்லவா? லக்ஷ்மிக்குப் பதினெட்டு வயதிருக்கலாம். அவள் நல்ல அழகு வாய்ந்தவள்; அவள் சுத்தப்பட்டிக் காடல்ல. பவுடர் அடித்துக்கொள்ளத் தெரியும்; ரொம்ப நாகுக்குக்காரி என்று எல்லோரும் சொல்லுவார்கள். தர்பார்க் கிழவர் அவளுக்கு வேண்டியவையெல் லாம் வாங்கிக் கொடுப்பார். அவளுக்கு நாவல் படிப்பதும் பவுடர் அடித்துக்கொள்வதுந்தான் வேலே. உறவினர் வந்தால்கூட அவர்களிடம் அதிக மாகப் பேச மாட்டாள். அவர்கள் எல்லாம் நாகரிக மற்றவர்கள் என்பது அவளுடைய எண்னம். கல்யாணமாகிக் கொஞ்ச காலம் புது வாழ்க்கை பும், நாகரிக நடை உடைகளும், பணச்செருக்கும் கன்டகிக்கு இன்பம் கொடுத்துக் கொண்டிருந்தன; ஆஒல் விரைவில் யோசனை செய்யவேண்டிய காலம் பிட்டது. முத்துச்சாமிக் கவுண்டர் எப்பொழுதும் தம் இனம் மனைவியுடன் இருப்பார், வெல்லப்பாகில் ஈ மோப்ப்பது போல. லக்ஷ்மி தன்னைப்போன்ற இள வயதினர்களுடன் உல்லாசமாகக் காலங்கழிக்க ஆசைப்படுவாள். இது, அவருக்குப் பிடிப்பதில்லே. கிழட்டு மோகம் என்று சொல்லுவார்கள்; அது לה מי", ל: - مجہ سہ، سیّم سی-ای + {* விக்குச் சங்கடமாக இருந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/42&oldid=825124" இலிருந்து மீள்விக்கப்பட்டது