பக்கம்:பிள்ளை வரம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 ប្r or ឆ មំ பாவனையெல்லாம் அடியோடு சாம்பலாகிவிட்டது. அடக்கம் பிறந்தது. அவன் மறுமொழியைக் கவன மாகக் கேட்கலானேன். 'பலபேர் புகழுகிரு.ர்கள் என்ற எண்ணத்தால் தானே அரைகுறையாக நீ உனது ஒவியத்தை இன்று முடிக்க நினைக்கிருப்? உனக்கு இன்றைய வேலை முற்றும் திருப்தியா? இல்லையே! சாதாரண மக்கள் புகழுரையில: மன நிறைவு அடைவது? ஆயிரத்தில் ஒருவனை ரசிகளை மகிழச் செய்வதல்லவோ சிறந்த கல்? அதோடு நீ நினைக்கிருய், உனது ஒவியந்தான் கவனிக்கப்படுகிறதென்று! உண்மை அதுவல்ல. இந்த ஒவியம் எப்படி மக்களுடைய உள்ளத்தில் உணர்ச்சிகளை எழுப்புமோ அதுபோல ஒவ்வொருவ னுடைய வாழ்க்கைச் சித்திரமும் அதன் மதிப்புக்குத் தக்கபடி உலகில் இன்ப துன்பம் போன்ற மாருன உணர்ச்சிகளை விளைவிக்கின்றது. அதன் பயனை நாம் எல்லோரும் தெரிந்தோ தெரியாமலோ அனுபவிக் இழுேம். மற்றும் எல்லோருடைய வாழ்க்கைச் சித்திரத்தையும், உனது சித்திரமும் உள்படக் கவனித்துத் தீர்ப்புச் சொல்லும் மகா ரஸிகன் ஒருவன் இருக்கிருன். அவன் பார்வையில் அகப் ப்ட்ாதது ஒன்றும் இல்லை. அவனே மகிழ்விப்பதே வாழ்க்கையின் குறிக்கோளாகும்” என்று நிதான மாக அவன் பேசிஞன். எனக்கு எல்லாம் விளங்கிவிட்டது. இவன் சாதாரணப் பேர்வழி அல்ல என்பதும் தெரிந்து கொண்டேன். அதே சமயத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி அ வ னு ை- ய கருத்தைத் தெரிந்துகொள்ள என்னுள்ளே ஆவல் குதித் தெழுந்தது. "அந்த மகா ரளிகன் என்னப்பற்றி என்ன நினைப்பானே?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/79&oldid=825164" இலிருந்து மீள்விக்கப்பட்டது