பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

103



என்னைப்போல் இரவில் உன் காதலியைத் தவிக்கவிட்டு வந்து விட்டாயா?”

“யான் அரவினைத் தீயிடத்து இருந்து அகற்றினேன். ஆனால் என் காதலியைத் தீமையில் விட்டு விட்டு வந்திருக்கிறேன். பாம்புக்குப் பால் வார்த்தேன். பாவை அவளுக்குக் கொடுமை செய்தேன். பரோபகாரம் செய்த யான் உற்றவளுக்கு உதவிகள் செய்வதை மறந்துவிட்டேன். கட்டிய மனைவி அவளைக் கதறவிட்டேன். காட்டில் அரவுக்கு இரக்கம் காட்டினேன். முரண்பாடு கொண்ட வாழ்க்கை இது".

“நீயும் அலையுறுகின்றாய்! நீயும் இப்படி ஏதாவது தவறு செய்துவிட்டாயா? அப்படிச் செய்திருந்தால் ஏன் அவ்வாறு செய்தாய்? நீ பிறர் மெச்ச வாழ்பவன் அல்ல; உலகம் உயர நீ உதவுகிறாய். நான் ஊர் மெச்ச உபகாரி யாயினேன். உண்மை என்னிடம் இல்லாமல் போயிற்று. நீ அழும் அழுகுரல் என்னை ஆழ்துயரில் அழுத்துகிறது; சிந்திக்க வைக்கிறது.”

“பெண்களால் கலங்கிப் பேதுறும் நிலை உனக்கும் வாய்த்துவிட்டது. அதே போல எனக்கும் ஏற்பட்டு விட்டது. நமக்கு யார் ஆறுதல் கூறுவார்கள்?” என்ற பேசினான்.

வழியில் முத்துப் போன்ற அழகுடைய பல்லினை உடைய அழகியர் சிலர் இவனைக் கண்டனர். அவர்கள் சிரிப்பு ஒலி தன் காதலியை அவனுக்கு நினைவுறுத்தியது. அவள் பேரழகு அவனுக்குத் தன் காதலியை நினை வூட்டியது.

மகளிரைப் பார்க்கவும் அவன் அஞ்சினான்; பின் வாங்கினான். இளமை நினைவுகள் அவனை விட்டு அகன்று சென்றன. அவர்கள் அவனுக்குச் சிலிர்ப்பைத்