பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

புகழேந்தி நளன் கதை



தரவில்லை; கிளர்ச்சியும் ஊட்டவில்லை. மேலும் இவனைக் கண்டு அவர்கள் ஒதுங்குவது போல் தெரிந்தது.

அவர்கள் முறுவல் அவனுக்குப் புதுமையைத் தந்தது. புது வாழ்வு மலரும் என்ற நம்பிக்கை தந்தது. கங்கை பாயும் நாடு ஆகிய அயோத்தியைச் சென்று அடைந்தான். நிடத நாட்டு அரசனாகிய நளன் அயோத்தியை அடைந்தான்.

பார்வேந்தனாக இருந்த நளன் அயோத்தி மன்னனின் வாயில் காவலர்க்குத் தன்னைப் பற்றித் தேர் ஒட்டவும், தேர்ந்த சமையல் செய்யவும் வல்லவன் என்பதைத் தெரிவித்தான். மன்னனுக்குச் சோறு சமைக்கும் ஆளாகப் பணி செய்ய வந்ததாகத் தெரிவித்தான். அரசனிடம் அறிவிக்குமாறு அறிவித்தான்; தன் பெயர் ‘வாகுவன்’ என்றும் தெரிவித்தான்.

அவன் கூறிய செய்தியைக் காவலர்கள் அரசனுக்குச் சென்று உரைத்தனர்.

ஏவல் செய்ய ஒருவன் வந்திருக்கிறான் என்று கூறினார்கள்.

“வருக! அவனைக் கொண்டு தருக” என்று அனுப்பினான். நளனும் அரசன் முன் வந்து நின்றான்.

“நீ எந்தத் தொழில் வல்லவன்?” என்று நளனை நோக்கி அயோத்தி மன்னன் வினாவினான்.

கொடைத் தொழில் வல்லவனாகிய நளன் தான் மடைத் தொழிலிலும் படைத் தொழிலிலும் வல்லவன் என்று கூறிக் கொண்டான்.

தோள் குறைந்தவன் அவன் எப்படிப் படைத்தொழில் செய்ய முடியும்? அதற்குத் தகுதி அற்றவன் என்பதை அறிந்தான். “படைத் தொழிலுக்கு உடைமை