பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

105



வீரம்; வன்மைமிக்க தோள்கள்; அவை இல்லையே உன்னிடம்” என்றான்.

“அதனால் தேர்த் தொழில் மட்டும் செய்கிறேன்” என்றான். வீட்டில் மடைத் தொழில் வெளியே தேர் ஒட்டி என்று தெரிவித்தான்.

ஒரே ஆள் இரண்டு தொழில்களில் தேர்ந்தவன் என்று கேட்டதும் மன்னன் மனம் குளிர்ந்தான்.

ஒன்றில் இரண்டு அடங்கி இருப்பது கண்டு மகிழ்ந்தான். சமைக்கவும் வல்லவன்; வண்டி ஒட்டவும் வல்லமை பெற்றவன். சரியான ஆள்தான் என்று முடிவு செய்தான். பணியில் அவனை அமர்த்திக் கொண்டான்.

நளன் அரசன் என்பதால் அறிவு மிக்கவனாக இருந்தான். அயோத்தி மன்னன் மனம் விரும்பும்படி கலந்து பழகினான்; உரையாடினான். அறிவிற் சிறந்தவன் என்ற நன்மதிப்பையும் பெற்றான்.

அந்தணன் நளன் மக்களைக் கொண்டு போய்ச் சேர்த்தான். அவனே தமயந்தியையும் கண்டுபிடித்து அவள் தந்தையிடம் சேர்த்து வைத்தான். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் அந்தணன் மதிக்கத்தக்க இடத்தையும் பெற்றான்.

தமயந்தி யோசித்துப் பார்த்தாள். அங்கே தன் தந்தை வீட்டில் சுகமாக இருக்க அவள் விரும்பவில்லை. உண்பதும் உறங்குவதும்தான் வாழ்க்கை அல்ல என்பதை அறிந்தாள். தன் கணவனைக் கண்டு அவனை அழைத்து வருவது என்று சிந்தித்தாள்.

தன்னையும் தம் மக்களையும் தன் தந்தை வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பித்த அந்தணன் அவன் நினைவு அவளுக்கு வந்தது.