பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

107



அவன் அதனை அறிந்தவன்போல் பேசினால் அதுதான் அவனைக் கண்டுபிடிக்க அடையாளம்” என்றாள்.

தனக்கு நல்ல காலம் வரக் காத்திருக்கிறது. தன்னால் அவனைக் கண்டு வரமுடியும் என்று திடம் கொண்டு புறப்பட்டான்; விடைபெற்றான்; நடந்தான் திசைகள் தேடி.

மாபெரும் நகர்களில் எங்காவது மறைந்திருப்பான் என்று யூகித்தான்.

அயோத்தி நகர் புகழ்மிக்க நகர்; பெருநகர்; அங்கு அவன் இருக்கக் கூடும் என்று யோசித்தான்.

குட்டையான கைகளுடன் கட்டையான ஒரு ஆள் அங்கு இவன் எதிரே வந்தான்.

அயோத்திக்குப் புதியவன் என்பதை அறிந்து கொண்டான்.

“காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்டான் ஒரு மன்னன்; அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான்.

“அவன் மிகவும் பாதகன் அல்லவா” என்று மேலும் கேட்டான் அந்த அந்தணன்.

“எல்லாம் விதி; அது வலிது; அது சிலர் மதியை மயக்கி விடுகிறது” என்றான்.

“நீ அவனைப் பற்றி என்ன நினைக்கிறாய்” என்று கேட்டான்.

“அவன் தெரிந்து செய்யவில்லை. அவள் நன்மைக்காகவேவிட்டு விலகினான்” என்றான்.

இவ்வளவு விவரமாகச் செய்திகளை அறிந்து கூறுகிறான். இவன் நளனாக இருக்கக் கூடும் என்று ஐயுற்றான்.