பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

111



இடைவெளி; அந்த அரசனால் அவ்வளவு விரைவில் தேரில் வர இயலாது; நளனை அழைப்பான்; அவனும் மறுக்கான்; மறைந்து வாழ்வது மாற்ற இயலும்” என்று தெளிவுறுத்தினாள்.

அந்தணன் அயோத்தி அடைந்தான்; அரசனைச் சந்தித்தான்; செய்தி அறிவித்தான். அவன் அது கேட்டு வியந்தான். இன்பம் தன்னைத் தேடி வருவதாகக் கொண்டான். தமயந்தி அவன்கண் முன் நின்றாள். அவள் பொன்மாலை ஏந்தி நளன் கழுத்தில் போட்ட காட்சியை நினைத்தான். பொறாமை உள்ளே இருந்து கொண்டு கொழுந்துவிட்டு எரிந்தது. “அவன் தொலைந்தான், இனி தனக்கு நலம்தான்” என்று கொண்டான். அடுத்த வாய்ப்பு தனக்குத்தான் என்று மனப்பால் குடித்தான். அந்தக் கற்பனையில் ஆழ்ந்தான்.

“எம் அரசன் தன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று முரசு அறைவித்து அரசர்க்கு உரைத்திருக்கிறான். அதுவும் நாளையே நடைபெற உள்ளது” என்று செய்தியைக் கூறினான்.

எண்ணிப் பார்த்தான்; இடைவெளி ஒரே ஒரு நாள். தேர் ஏறிச் சென்றாலும் நாட்கள் பல பிடிக்கும். என் செய்வது; தன் உடன் இருந்த வாகுவனை அழைத்தான் “இலகுவில் எப்படி அங்குச் சேர்வது?” என்று கேட்டான். இதை நம்ப முடியவில்லையே” என்றும் கூறினான்.

“நீர் ஐயப்படுவது உண்மைதான். அவள் குறையாத கற்பினாள். கொண்டானுக்கு அல்லால் அவள் மனம் இசையாள்; வசை இது; வழக்கும் அன்று; அது நடக்காது; நடவாது; அதற்கு அவள் இசையாள்” என்று கூறினான்.

“நீ நினைப்பது ஒரளவு உண்மைதான்; அவளைப் பற்றிப் பொதுவாக அறிந்தவர் இவ்வாறு பேசுவர்; இது