பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112

புகழேந்தி நளன் கதை



உலகப் போக்கு. பெண்ணின் நெஞ்சு அது பஞ்சினும் மென்மையானது. இளகிய மனம் உடையவள்; என் மீது அவளுக்கு ஒரு கண் இருந்தது. அவள் என் பெருமை அறிந்தவள். அவள் எடுத்த மாலை எனக்குத்தான். அடுத்து இருந்தவன் நளன். கை தவறி அவன் கழுத்தில் விழுந்துவிட்டது. இதுதான் நடந்தது” என்று ஒரு விளக்கம் தந்தான்.

அவன் கூறுவது கேட்க “அவன் மனத்தில் அது ஒரு வடிவு பெற்றுள்ளது; ஆழமான நம்பிக்கை; அதை மாற்ற முடியாது” என்பதை நளன் அறிந்தான்.

அதை மாற்றவோ மறுக்கவோ அவன் விரும்பவில்லை.

“முதல் சுயம்வரமே அவள் தனக்காகத்தான் வைத்தாள். உள்நோக்கம் இதற்கும் இருக்கத்தான் வேண்டும். அரசிஇயல் இது; எதிலும் ஒர் உள்ளடக்கம் இருக்கும்; அதற்கு வாய்ப்புள்ளது".

“தன்னை அங்கு அழைக்கவே இந்தத் திட்டம்” என்பதைக் கண்டு கொண்டான். “ஒரு வேளை தீய வினைகள் அடுக்கிக் கொண்டு வருகின்றனவோ! இது கலியின் திருவிளையாடலோ; அவள் மனத்தை மாற்றி மயக்கி விட்டார்களோ! ஏதோ ஒரு மாற்றம்” என்று பலவாறு எண்ணினான்.

அரசன் தன்னுடன் வருமாறு நளனை அழைத்தான். தேர் ஒட்ட அவன் தேவை என்பதைத் தெரிவித்தான். கடமை; அதற்குக் கட்டுப்பட்டான்.

“அழைப்பு அயோத்தி மன்னனுக்குத்தான் என்றாலும் அவன் தேர் ஒட்டி அங்குச் செல்லத் தடை இருக்காது; என்னதான் நடக்கும்? அதையும் பார்த்து விடலாம்” என்று உடன் புறப்பட்டான். அவன் இட்ட