பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

115



பிறர் மனத்தை அறியும் ஆற்றல் அவனுக்கு வந்துவிட்டது. கலியின் திட்டங்களை அறிந்து விலக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டான். அறிவும் ஆற்றலும் மட்டும் இருந்தால் போதும்; எதிரியை அளக்கும் கூர்த்த அறிவு தேவை. அப்பொழுதுதான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்பதை அறிந்தான். வெற்றி என்பது முழு ஈடுபாட்டை ஒட்டியது ஆகும். எதிரியின் எண்ண ஓட்டம், சூழ்ச்சித் திறன் இவற்றை அறிந்து செயல்படுவது தேவை; பிறர் எண்ண ஓட்டத்தை அறியும் ஆற்றல் அவன்பால் அமைந்தது.

இனி தன் செயல்திறன் எடுபடாது என்று கலியன் கண்டு கொண்டான். கொடை வள்ளல்களை அண்டி அணுகும் புலவர்களின் பசி நீங்குவதுபோலக் கலி அவனை விட்டு அகன்றான். இனி அவனை யாரும் அசைக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகியது.

ஆமை முதுகில் நண்டு துயில் கொள்ளும் நாடு அயோத்தி மன்னன் நாடு; அதனை நீங்கி வீமன் திருநகரை நளன் அடைந்தான்.

வீமன் மாளிகையை அடைந்தான். தன் வருகையை அங்கிருந்த காவலர்க்கு எடுத்து உரைத்தபின் விருந்தினர் விடுதியை அடைந்தான். நளன் வேறு அயோத்தி மன்னன் வேறு எனப் பிரிந்தனர். அட்டில் சாலையை அவன் தன் கொட்டில் இடமாகக் கொண்டான்.

அயோத்தி அரசன் வருகையை அறிந்த வீமன் தன் இருகையும் எடுத்து வணங்கி வரவேற்றான். தன்னை நாடி வரக் காரணம் யாது? அவனுக்கு விளங்கவில்லை. தனக்கு இருந்தது ஒரே மகள். அவளுக்கு வேண்டிய விளம்பரம் தந்து விழா எடுத்து மணமும் முடித்துத் தீர்த்துவிட்டான்.

அவனுக்குத் தெரிந்து அவன் வேறு எந்த மகளுக்கும் தந்தையானது இல்லை; அப்படி எந்தப் பெண்ணும்