பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

புகழேந்தி நளன் கதை




“அவனை எப்படி இழுப்பது? எவ்வாறு அழைப்பது? எதைப் பேசுவது?” என்று வினாவினாள்.

“வழி உள்ளது; மக்கள் இருவரையும் உன்னுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் அவன் முன் ஆட விடுக; அவன் நாட வருவான்; அப்பொழுது அவனை அறிக; சொற்களைக் கண்டு சொந்தம் பந்தம் அறிய முடியும்” என்று கூறினாள்.

“கன்றினைக் கண்டால் பசு ஒடிவரும்; எளிதில் அவனை அறிந்து கொள்ள முடியும்” என்று கூறி அனுப்பினாள்.

நாடகம் தொடங்கியது; மக்கள் இருவரும் அவன் முன் விடப்பட்டனர். நளன் தன் மகள் மகனைக் கண்டான். சற்று வளர்ந்திருந்தனர். அரசன் இல்லில் வளர்ந்தவர்கள்; மலர்ச்சி பெற்று இருந்தனர். இடைவெளி அவர்களை மாற்றி இருந்தது. அவர்கள் வளர்ச்சி கண்டு இவன் உள்ளம் விம்மிதம் எய்தியது. இவனும் எடை கூடினான்.

அவனால் தன்னை அடக்கிக் கொள்ள முடிய வில்லை. இருவரையும் வாரி எடுத்தான்; அணைத்தான்; உச்சி முகர்ந்தான்; மெச்சிப் புகழ்ந்தான்; நச்சி அணைந்தான்.

தேர் ஒட்டி! இவன் ஏன் அணுகுகிற ஆசை வார்த்தைகள் பேசுகிறான். எங்கோ கேட்ட குரலாக இருந்தது. தம்மை அறியாமல் அவர்களும் அவனை அணுகினர்.

மற்றும் அவன் அன்பு குழையப் பேசினான்.

“என்னய்யா யார் நீ! ஏன் எங்களை எடுக்கின்றீர்” என்று கேட்டனர்.

“எனக்கும் உங்களைப்போல் பிள்ளைகள் உள்ளனர். அவர்களைப் போலவே நீங்கள் இருக்கிறீர்கள்;