பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

119



வித்தியாசமே இல்லை; அதனால்தான் உங்கள்பால் எனக்கு இந்த ஈர்ப்பு” என்றான்.

“நாங்களாகவே இருந்தால்” என்றனர். அவர்கள் சிரித்துப் பேசினர்.

“அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

“அது எப்படி முடியும்? நீ தேர் ஒட்டி; என் தந்தை பார் ஆளும் மன்னன்” என்றனர்.

“எப்படி இங்கே வந்தீர்” என்று வினாவினான் நளன்.

“என் தந்தை எங்களை விட்டுப் பிரிந்தார். காட்டில் என் தாயைத் தவிக்கவிட்டுத் தனியாக நடந்து சென்று விட்டார். அதனால் நாங்கள் இந்த நகரை வந்து அடைந்திருக்கிறோம். எங்கள் நாட்டை மற்றொருவன் ஆள்கின்றான்” என்றனர்.

“உங்களுக்கு வெட்கமாக இல்லையா? மாற்றான் ஒருவன் உங்கள் நாட்டை ஆள்கின்றான். நீங்கள் பிறர் கையேந்தி வாழ்கின்றீர்; மானம், வீரம் இவற்றை எல்லாம் அடகு வைத்துவிட்டு இங்குப் புகலிடம் தேடிக் கொண்டீர். மன்னன் மக்கள் என்று கூறுகிறீர்; அந்த வீரம், விவேகம், செயல்பாடு இவை எல்லாம் எங்கே போயிற்று!”

“உங்கள் பெருமை எல்லாம் என்ன ஆயிற்று. சுகம் தேடி இங்கு வந்து ஒடி ஒளிந்து கொண்டிருக்கிறீர்” எனறான்.

“மடையன் நீ; எதைப் பேசுவது? யாரிடம் பேசுகிறாய் என்பதும் அறியாமல் பேசுகிறாய். என் தந்தை இருந்தால், நீ சொல்வது கேட்டால், பேசுவது அறிந்தால், அவர் இந்நேரம் கொதித்து எழுந்து உன்னை மிதித்து இருப்பார்; தப்பித்தாய்” என்றனர்.