பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

121



கிளர்ச்சி ஊட்டிய கைகள் தளர்ச்சி உற்றனவே என்று கூறி வருந்தினாள். தடவிக் கொடுத்த கைகள் இன்று தட்டு முட்டுகள் கழுவ நேர்ந்ததே என்று வருந்தினாள்.

அன்று வாழ்ந்த வாழ்க்கை அவள் கண்முன் வந்து நின்றது; அவனோடு மகிழ்ந்த நாட்கள் அவற்றை எண்ணிப் பார்த்தாள். அடுக்களை அறியாத அவன் கைகள் இன்று புகை வடுக்களைப் பெற்று விட்டனவே என்று எண்ணி வருந்தினாள்.

தன் கொங்கைகளைத் தொட்டு வருடிப் பின் கூந்தலை நீவிய அந்த அழகிய கைகள் இன்று கறுத்து விட்டன என்று எண்ணிப் பார்க்கும்போது அவள் நெஞ்சு வெடித்தது; கரும்புகை அவள் பெருமூச்சில் வெளிப் பட்டது. வேதனையுள் ஆழ்ந்தாள். முதலில் அவனைப் பார்க்க வேண்டும். அந்தக் கையைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். அதனைத் தடவித் தர விழைந்தாள். அவன் வருகையை எதிர்நோக்கி நின்றாள்.

நேரே தந்தையிடம் சென்றாள். புதிருக்கு விடை கண்டதுபோல் அவன் எதிருக்கு நின்று பேசினாள். “சந்தேகமே இல்லை; அவர்தான் அவர்” என்றாள்.

அவர் என்றால் எப்படி விளங்கும்? “யாரைக் குறிப்பிடுகிறாய்"? என்று கேட்டான் லிமன்.

“உம் மருமகன்” என்றாள்.

சென்ற உயிர் தானே இடம் தேடி வந்தது போல் ஆயிற்று அவனுக்கு.

“யாரைக் கூறுகிறாய் விளக்கமாகக் கூறு” என்றான்.

பெயரைக் குறிப்பிடவில்லை. அந்த அளவு பெண்கள் அன்று உரிமை எடுத்துக் கொள்ளவில்லை. சம உரிமை என்ற சரித்திரத்தை அவர்கள் படைக்க அன்று