பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

123



உருமாறி இருந்தான்; அது எப்படி இவ்வாறு மாற முடிந்தது? சிந்தித்துப் பார்த்தான்.

அலைச்சல் அவன் மாற்றத்துக்கு காரணம் என்று முடிவு செய்தான்.

கடன் பட்டவர்கள் முக்காடு இட்டுக் கொண்டு முகம் மறைத்துக் கொள்வது இயல்பு; சிலர் தாடி, மீசை வைத்துத் தரித்திரர்கள் போல் காட்சி அளிப்பதும் உண்டு; மொட்டை அடித்துக் கொண்டு முடி இழந்தமையை வெளிப்படுத்துவதும் உண்டு. இப்படிக் குட்டையானவர்களை அவன் இதுவரை பார்த்ததே இல்லை.

“மருட்சி மிக்கது உன் நாடு; கமுக மரத்தின் பாளையை ஐந்தலை நாகம் என்று மந்தி தெளியாது இருக்கும் நாடு உம்முடைய நாடு; நீயும் சுய வடிவு காட்டாமல் அயல்வடிவில் நிற்கிறாய். அதனை மாற்றிக் கொள். வேறு சட்டை போட்டுக் கொள். உடுத்திக் கொள். உருவை மாற்றிக் கொள்” என்று வேண்டினான்.

வாழ்க்கை நாடகம் அல்ல; ஒளி மறைவுகள் சில காலம் அமையலாம். நீடிக்க முடியாது. நாடகப் பாங்கு இனித் தேவையில்லை.

கார்க்கோடகன் அளித்த அழகிய ஆடை அதனை எடுத்தான். மந்திரக் கோல்போல் அது விளங்கியது; உடுத்திக் கொண்டான். ஆள் மாறினான். நளன் அவர்கள் முன் வந்து நின்றான்.

அரவரசன் அவனுக்குத் தந்த அழகிய ஆடைகளில் ஒன்றினை எடுத்து உடுத்தான்; மற்றொரு துகிலைப் போர்வையாய் மடுத்தான். அவன்தன் பழைய உருவினைப் பெற்றான்.

மகன் ஒடோடி வந்தான். தந்தையைக் கண்டதும் தன் சிந்தையைப் பறி கொடுத்தான். தாமரை ஒத்த அவன்