பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

129



நகரத்தின் புறத்தில் ஒரு சோலையில் தங்கினான். தூதுவர் சிலரை அனுப்பிச் சூது ஆட அவனை வருமாறு அழைத்தான்.

அழைத்தால் வராமல் இருப்பது எப்படி? கட்டுக் குலையாமல் நளன் தன் துணைவியோடு இருப்பதைக் கண்டான். பட்டுப் புடவையில் அவள் பளிச்சிட்டது அவன் கண்ணைப் பறித்தது. அவர்கள் அழிந்து போய் இருப்பார்கள் என்று கணக்கிட்டு இருந்தான்.

குத்து விளக்காக அவன் குடும்பம் ஒளி பெற்றுத் திகழ்வதைக் கண்டான். அரசிக்கு உரிய அந்தஸ்துடன் அவன் துணைவி அமர்ந்திருப்பதைக் கண்டான். வயிறு எரிந்தான்.

இனி என்ன செய்வது? உறவினன் போல் பழக முனைந்தான். நல்லவன் போல் நடித்தான். பழகியவன் போல் பல் இளித்தான். அவனை விசாரித்தான். “மக்களும் மனைவியும் சுகம்தானா!” என்று வினவினான். நலம் விசாரித்து நட்புக் காட்டினான்.

அவன் மதி மயங்கியது; தன் நிலை தடுமாறினான். பழைய வெற்றி கலியன் தந்தது என்பதை மறந்து விட்டான். “அவனன்றி ஒர் அணுவும் அசையாது” என்ற உண்மையை எண்ணிப் பார்க்கவில்லை.

தன் ஆற்றலை அவன் நம்பிக் களத்தில் இறங்கினான். பின்னணியில்லாமல் சுயேச்சையாக நிற்கும் தனி மகனாகச் செயல்பட்டான்.

“ஆடுவதற்கு என்ன உள்ளது?” என்று கேட்டான்.

நளன் தன் கைமோதிரத்தைக் காட்டி அதை முதலாக வைத்து இழந்த பொருள்கள் ஒவ்வொன்றாகத் திரும்பப்