பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

புகழேந்தி நளன் கதை



பெற்றான். அயோத்தி மன்னன் கற்பித்த நினைவு ஆற்றல் அவனுக்குக் கைகொடுத்தது. கலியன் புட்கரனுக்குத் துணை நிற்கவில்லை. தனித்து நின்று போட்டி இட்டான். மண்ணை வாரிக் கவ்விக் கொண்டான். அவன் ஆட்சி கவிழ்ந்தது. இப்படித்தானே வருணிக்கிறார்கள். ஆட்சி கைமாறியது; நளன் வேந்தன் ஆயினான்.

நளன் இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். அந்நியர் ஆட்சி அகன்றது என்பதால் மக்கள் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என்று பாடி மகிழ்ந்தனர்.

“நளன் வாழ்க! காதல் வெல்க” என்று முழக்கம் எழுப்பினர்.

காதலுக்குக் கிடைத்த வெற்றி என்று நகரத்து இளைஞர் அவர்கள் தம் காதலியருடன் உரையாடினர். இதை ஒரு சான்றாக வைத்துப் பேசினர்.

“வாழ்ந்தால் நளன் தமயந்தி போல் வாழ்வோம்” என்று இளைஞர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.

‘அன்னத்தின் ஒவியம்’ அந்த நாட்டுச் சின்னத்தின் அடையாளமாக மாறியது. கன்னியர்கள் அன்னப் பறவையிடம் அளவற்ற பிரியம் காட்டினர்.

அன்னத்தின் மீது நம்பிக்கை வைத்தனர். இலக்கியத்தில் அது அழியா இடம் பெற்றது. நல்லது கெட்டது அறிந்து செயல்படும் பறவை என்ற புகழ் நிலைத்தது.

அந்த நாட்டு மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு கூற முடியாமல் போய்விட்டது. புலவர்கள் சில அளவைகள் வைத்திருந்தனர். மகிழ்ச்சி என்பதற்குச் சில அளவு கோல்கள் கருவிகள் அவர்கள் அகராதியில் வைத்திருந்தனர்.