பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

131



மழை மேகத்தைக் காணும் மயில், விழி பெற்ற குருடன், நீர் பெற்ற நிறை வயல் இவற்றை அளவாக வைத்திருந்தனர். பார் பெற்று மாதோடு மன்னன் வரக்கண்ட மாநருக்கு இவை மூன்றனையும் உவமை கூறினர்.

“நளன் சிறப்புற ஆட்சி செய்தான். நீதி வழுவவில்லை; நேர்மை குறையவில்லை அவன் புகழ் நிலைத்த ஒன்று” என்று மக்கள் பாராட்டினார்.

இந்தக் கதையை வியாசர் தருமனுக்கு உரைத்தார். அவனுக்கு நம்பிக்கை ஊட்டினார்.