பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

புகழேந்தி நளன் கதை



16. உவமை உருவகம் கலத்தல்

ஒரே கவிதையில் உவமை இடம் பெறுகிறது. மற்றும் ஒர் உருவகம் உவமையோடு பின்னிப் பிணைத்து அழகிய ஒவியத்தைப் படைக்கிறார்.

மன்னர்கள் தமயந்தியை விழித்த கண் வாங்காமல் பார்க்கின்றனர். அவர்கள் இடையே இவள் புகுகின்றாள். அவர்கள் விழிகளைத் தாமரை என்கிறார். அதனால் அம் மண்டபத்தை ‘விழித்தாமரை பூத்த மண்டபம்’ என்று கூறுகிறார். மண்டபத்தில் எப்படித் தாமரை பூக்கும்? தாமரை பூத்த மண்டபம் அது என்கிறார். ‘விழித்தாமரை’ என்பதால் அது பொருந்துகிறது.

அதனை வளப்படுத்தும் வகையில் அடுத்துள்ள செய்தி அமைகிறது. அம்மண்டபத்தில் தமயந்தி புகுந்தாள். பொய்கையிடத்து அன்னம் போவதே போன்று அவள் புகுந்தாள் என்கிறார்.

அந்த மண்டபம் பொய்கையாகிவிடுகிறது. விழித்தாமரை பூத்த பொய்கையில் பாவை புகுந்தாள் என்று கூறி இருக்க வேண்டும். அதனை நிறைவு செய்யும் வகையில் பின்பு அவர் அமைக்கும் உவமை நிறைவு செய்கிறது.

மன்னர் விழித்தா மரையூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னம் செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று

17. தமிழமுது சொல்லாட்சி

அரசர்களைச் சேடி ஒருத்தி அறிமுகம் செய்கிறாள். சோழனுக்கு முதலிடம் தருவது அவர் தமிழ்ப் பற்றையும்,