பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

புகழேந்தி நளன் கதை



18. தற்குறிப்பேற்ற அணிகள்

கடற்கரை வழியாக நளன் அயோத்தி செல்கிறான். வழியில் தன் துயரை வாய்விட்டுப் பேசாத நண்டோடும், எதிர் உரைதராத கடலோடும் கூறிப் பகிர்ந்து கொள்கிறான்.

அவன் செய்த கொடுமையை அடுக்கிக் கூறுவது அழகு தருகிறது. சோகத்தை மிகுவித்துக் காட்டுகிறது. மற்றும் மோனைகள் ஒசை இனிமை தந்து உணர்வைக் கூட்டுகிறது.

காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஒடி
ஒளிக்கின்ற தென்னோ உரை?

காதலியைக் கைவிட்ட பாதகன் என்பதாலும் பார்க்கத் தகாதவன் என்பதாலும் ஒடி ஒளிக்கின்றாயோ என்று வினவுகின்றான். அலவன் என்பது நண்டைக் குறிக்கும் சொல்.

மோனைத் தொடை அழகும் எதுகை நயமும் இக் கவிதைக்கு உணர்வு சேர்க்கின்றன.

நண்டு செய்வது அது யார் வந்தாலும் தன்குழிக்குள் சென்று மறைந்துவிடும். இவனைக் கண்டு இவன் தகாதவன் என்பதற்காகச் செல்லவில்லை. தன் குறிப்பை அதன்மீது ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி யாகிறது.

19. சிலேடைநயம்

மற்றும் அடுத்துள்ள கடல் நீரைப் பார்க்கிறான். அலைகள் கரையில் வருகின்றன. பின்நோக்கிச் செல்கின்றன. புரண்டு விழுகின்றன. இரைச்சல் இடுகிறது. அதனை நாவாய் குழற நடுங்குவதாகக் கூறுகிறான்.