பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

புகழேந்தி நளன் கதை



அவ்வெண்ணிலவில் எந்தையை உடையேம்; இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எம் தந்தையும் இல்லை; எம் நாட்டையும் பிறர் கொண்டுவிட்டனர்” என்று கூறு கின்றனர். இந்த வேறுபட்ட முரண்பட்ட காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.

அதே போன்று தமயந்தியின் கூற்றும் இதில் இடம் பெறுகிறது. மாற்று உருவில் கண்டு வந்து தோழியர் அவனைப் பற்றி விவரிக்கின்றனர். புகையுண்ட கையனாக அவன் விளங்குவதை எண்ணிப் பார்க்கின்றாள். அன்று தன்னைத் திருத்தி அழகு செய்த கைகள் இன்று வருத்திக் கடுமை உற்றனவோ என்று கூறுகிறாள்.

அந்தக் காட்சி இக்கவிதையில் இடம் பெறுவது கவிதையில் சோகத்தின் உச்சியைத் தொடுகிறது.

கொங்கை யளைந்து சூழல் திருத்திக் கோலஞ்செய்
அங்கை யிரண்டும் அடுபுகையால் - இங்ஙன்
கருகியவோ என்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து

21. பல் பொருள் உவமை

நாட்டை மீண்டும் பெறுகிறான் நளன். ஆட்சியில் அமர்கிறான் அவன். இந்த நிலையில் மன்னனின் வருகை கண்டு மக்கள் உவகை கொள்கின்றனர். அதற்கு உவமை கள் பல அடுக்கிக் கூறுகிறார் கவிஞர். எந்த உவமையை இதற்கு யான் எடுத்துக் கூறுவது என்று மருட்கை தோன்றக் கூறுகிறார். பல பொருள்களை உவமை கூறுவது பாவிற்கு அழகு தருகிறது.

கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்கு
ஏதோ உரைப்பன் எதிர்?