ரா. சீனிவாசன்
147
வந்த சொல்லை மீண்டும் வைத்துச் சொல் நயம் தோற்றுவித்தல் இவர் பாடல்களில் காணப்படும் தனிச் சிறப்பு என்பது அறிய வருகிறது.
‘இழந்து’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து கவிதைக்குச் சொல் நயம் தருகிறது.
கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தாம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூல்மார்ப மேதினியில் வேறுண்டோ
என்போல் உழந்தார் இடர்?
‘கிடந்த’ என்ற சொல் மீண்டும் மீண்டும் இடம் பெற்று அழகு தருகிறது.
அறங்கிடந்த நெஞ்சும் அருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்தோள் வலியும் - நிலங்கிடந்த
செங்கண்மால் அல்லனேல் தேர்வேந்தர் ஒப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு
‘வைத்து’ என்பது மீண்டும் மீண்டும் வந்து புதுமை தருகிறது.
வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேல் செவிவைத்து மோகச் - சுழிமேல்தன்
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர
‘முகந்த’ என்ற சொல் புதுப் புதுப் பொருளில் ஆளப் படுகிறது.