பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

149



இம்மூன்றையும் வைத்து இவள் மானிடப் பெண் என்று முடிவு செய்கிறான். இது தமிழ்க் கவிதை மரபு.

இதனைக் கவிஞர் தேவனா? மானுடனா? இவர்களுள் யார் நளன்? யார் தேவர்கள்? என்பதை அறியப் பயன் படுத்துவது அவர் தமிழ்க் கவிதை உத்தியை ஆளும் சிறப்பைக் காட்டுகிறது. இவன் நளன் என்று அறிவித்தவாறு இது என்று கூறுகிறார்.

கண்ணிமைத்தலால் அடிகள் காசியினில் தோய்தலால்
வண்ணமலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு - என்பார்.

☆ ☆ ☆