பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

181




சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீரடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான்-வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு 202


அங்கைவேல் மன்னன் அகலம் எனுஞ் செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர்-அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோவையரின் மேலான கொம்பு 203

மாவிந்த நகர் வாழ்க்கை

வேரி மழைதுளிக்கும் மேகக் கருங்கூந்தற்
காரிகையும் தானும்போய்க் கண்ணுற்றான்-மூரித்
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறும் கங்கைக் கரை 204


சூதக் கணியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்கும் குப்பியென-மாதரார்
ஐயுற்று நோக்கும் அகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன் 205


வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான்தோன்று மாற்றின் தடம்பதிதான்-வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே எங்கள் நகர் 206


பொய்கையும் வாசப் பொழிலும் எழிலுருவச்
செய்குன்றும் ஆறும் திரிந்தாடித்-தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தான் அடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ 207


கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப-நூலென்னத்