184
புகழேந்தி நளன் கதை
தீது வருக நலம்வருக சிந்தையாற்
சூது பொரவிசைந்து சொல்லினோம்-யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று 221
நிறையில் கவறாடல் நீநினைந்தா யாகில்
திரையிற் கதிர்முத்தஞ் சிந்தும்-துறையில்
கரும்பொடியா மள்ளர் கடாவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானிப் போது 222
விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்
ஒட்டினேன் உன்பணையும் ஏதென்ன-மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து 223
காரேயும் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயும் தோளான் தனிமனம்போல்-நேரே
தவறாய்ப் புரண்ட தமைய னொடுங்கூடிக்
கவறாய்ப் புரண்டான் கலி 224
வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்
கொத்த பணயம் உரையென்ன-வைத்தநிதி
நூறாயிரத்திரட்டி நூறுநூறாயிரமும்
வேறாகத் தோற்றானவ் வேந்து 225
பல்லா யிரம்பரியும் பத்துநூறாயிரத்துச்
சொல்லார் மணித்தேரும் தோற்றதற்பின்-வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கும் மால்யானை
பின்றோற்றுத் தோற்றான் பிடி 226
சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான்-சூதரங்கிற்