பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

புகழேந்தி நளன் கதை



விரைமலர்ப்பூ மெல்லணையும் மெய்காவல் பூண்ட பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான் காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப் பூணேர் முலையாள் புலர்ந்து 273

தீய வனமும் துயின்று திசைஎட்டு மேதுயின்று பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக் - கண்மேற் றுயில்கை கடனென்றான் - கைகொடுத்து மண்மேற் றிருமேனி வைத்து 274

புன்கண்கூர் யாமத்துப் பூமிமேற் றான்படுத்துத் தன்கண் துயில்வாளைத் தான்கண்டு - மென்கண் பொடியாதால் உள்ளாவி போகாதால் நெஞ்சம் வெடியாதால் என்றான் விழுந்து 275

முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி இன்றுதுயில இறைவனுக்கே - என்றனது கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள் மைபுகுந்த கண்ணி வர. 276

வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத் தாமம் எனக்களித்த தையலாள் - யாமத்துப் பாரே அணையாயப் படைக்கண் துயின்றால்மற் றாரே துயரடையார் ஆங்கு 276

பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத செம்மை யுடைமணத்தான் செங்கோலான் - பொய்ம்மை விலக்கினான் நெஞ்சத்தை வேறாக்கி நின்று கலக்கினான் வஞ்சக் கலி 278

வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்குஞ் செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் - விஞ்ச மதித்ததேர்த்தானை வயவேந்தன் நெஞ்சத் துதித்ததே வேறோர் உணர்வு 279