பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

புகழேந்தி நளன் கதை



இவ்வாறு இவன் தனிமைத் துயரில் தளர்வு கொண்டி ருந்தான். நளன் அனுப்பி வைத்த அன்னப் பறவை தமயந்தி இருக்கும் இடத்தை அடைந்தது. அந்த அழகிய அன்னத்தைக் கண்டதும் தமயந்தி அதன் அருகில் அணைந்தாள். அவள் தன்தோழியருடன் விளையாடுவது விட்டுவிட்டு அந்த அன்னத்தைத் தனி இடத்தில் சந்தித்தாள்.

அது ஏதோ ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறது என்பதை அறிந்தவள்; ஆதலின், “நீ கூற வந்த செய்தி யாது?” என்று வினவினாள்.

கூர்த்த மதி படைத்த அந்தப் பறவை எப்படிக் கூறினால் அவள் ஏற்பாளோ அதை அறிந்து கூறியது. “செம்மனத்தான்” என்று கூறியது. தான் கண்டு வந்த ஆடவன் யார்? எத்தகையவன் என்பதைக் கூறத் தொடங்கியது. அவன் தன்பால் அன்பும் இரக்கமும் பாராட்டியதைக் கொண்டு அவனைத் “தண்ணளியான்” என்றும் கூறியது.

யாரோ ஒரு தீர்க்கதரிசியைப் பற்றிக் கூறுவதுபோல இருந்தது. புத்தனைப் பற்றிப் பேசுவது போல இருந்தது. யாரோ ஒரு மகானைக் கண்டு வந்தது போல் அதன் பேச்சின் தொடக்கம் அமைந்திருந்தது.

அரசன் அவன் என்பதை அடுத்துக் கூறியது. அதனால் அவளுக்கு என்ன நன்மை? ‘காதல் இளைஞன்’ என்பதை அடுத்துக் கூறியது. ‘மங்கையர் தம் மனத்தை வாங்கும் தடந்தோளான்’ என்று கூறியது. வாய்மை தவறாதவன் என்று அவன் தனிப் பண்பைக் கூறியது. இறுதியில் அவன் பெயரைக் கூறியது “நளன் என்பான் ஒருவன் உளன்” என்று முடித்தது.

சரி எத்தனையோ அரசர்கள் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவன்தானே இவன் என்று எண்ணக் கூடும்