பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

புகழேந்தி நளன் கதை



அறிவாளிகளும் மடமை காரணமாக அவனைக் கண்டு அஞ்சினர். இந்திரனை வந்து சந்தித்தான். தலைவர்களுக்கு மாலையிடக் கைத்துண்டைப்போடும் தொண்டனைப் போல் அவன் மாலை ஒன்று ஏந்தி அவன் வரும் வழியில் நின்றான்.

தமயந்தி இந்திரனுக்கு மாலையிடவில்லை. இவன் மாலை இடக் காத்திருந்தான். கழுத்தை நீட்டுவான் என்று கழுகு நிகர் கலிமகன் காத்திருந்தான்.

பத்திரிகை நிருபர்களைச் சந்தித்து அரசியல் நடத்தும் வரிசையில் இந்திரன் இருப்பான் என்று எதிர்ப்பாத்தான். புதிய செய்தி தருவான் என்று பேனாவில் மூடியைக் கழற்றினான்.

“நீ ஏன் வந்தாய்? உன்னை யான் எதிர்பார்க்கவில்லையே” என்று இந்திரன் கலியனைக் கேட்டான்.

“வெற்றிக் களிப்போடு வீடு திரும்புவாய்” என்று எதிர்பார்த்தேன். பரமசிவன் போல் பாதி உருவம் மற்றவள் ஒருத்திக்குத் தந்து பாகத்தனாக வருவாய் என்று எதிர்பார்த்தேன்” என்றான்.

கங்கை ஒருத்தி சடையில்; மங்கை ஒருத்தி இடையில்; இரண்டு பெண்களை அவன் சுமக்கிறான். அந்தத் திருக் காட்சியில் இந்திரனைக் காண விரும்பினான். மின்னும் நட்சத்திரம் வானத்திலிருந்து கையில் பிடித்துக் கொண்டு வருவான் என்று எதிர்பார்த்தான்.

தமயந்தி அவனுடன் வரவில்லை; உடன் சென்ற தருமத் தலைவர்கள் சோர்வோடு வந்ததைப் பார்த்தான்.

“மாலையிட்டு வரவேற்க வந்தேன்” என்றான்.