66
புகழேந்தி நளன் கதை
“வைப்பதற்கு இனி யாதும் இல்லை” என்பதால் செயல் இழந்தான்.
“வைப்பு என்பது யாதும் இல்லை” என்று கை விரித்தான்.
“மனையாள் அவள் ஒருத்தி அவளையும் வைத்து ஆடலாமே” என்றான்.
சுருக்கு என்று தைத்தது; எதிரியின் துணிவு அவனை அதிர வைத்தது.
காதல் மனைவி அவள் உயிரோடு ஒன்றியவள்; அவளையும் வைக்க என்றது அவன் உள்ளத்தில் சென்று தைத்தது.
“இனி இந்த இடம் நமக்குத் தகாது; பொன்மகளே; எழுக” என்றான். அருகில் இருந்த தன் மனையாளை நோக்கி “மிகவும் கொடியவன் அவன்” என்பதை அறிவித்தான்.
உடைமைகள் அனைத்தையும் இழந்தான். அதற்காக அவன் கலங்கவில்லை; மீட்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. மாசு இல்லாத மனைவியை அவன் தூசுப்படுத்த நினைத்தது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
எழுந்தான்; உடன் எழுந்தாள்; நடந்தான். அந்த அரங்கை விட்டு அகன்றான். மனையைவிட்டு நீங்கினான்.
நேற்றுவரை அவன் அரசன்; இன்று அவன் ஒரு குடிமகன்; அந்தக் குடிமையையும் புதியவன் மறுத்தான். நாட்டை விட்டு நீங்குவது தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.
தாமரை மலரில் தங்கும் அன்னம் அது அமரும் இடத்தில் ஒரு காக்கை அதைக் கவர்ந்து விட்டது; அங்கு அமர்ந்து விட்டது.