பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

புகழேந்தி நளன் கதை



‘காடு’ இன்னார்க்கு உரியது என்று பட்டயம் இல்லாத நாள் அது; வேறு வழியில்லை; தலை தப்புவது என்றால் வேற்று நாட்டை அடைவதுதான் வழி; அதற்காகவாவது காடு கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மனைவி மக்கள் அவன் உடன் தொடர்ந்தனர். இராமன் பின் சீதை நடந்தாள். இலக்குவன் பின் தொடர்ந்தான். இது இராமாயணக் கதை. இவன் மனைவி மக்களோடு புறப்பட முன் நின்றாள்.

ஆட்சியை எதிர்த்து மக்கள் புரட்சி செய்யும் நிலையில் அன்று இல்லை. இன்று உண்ணாவிரதம் இருக்கச் சுதந்திரம் உள்ளது. குறளகம் முன் கொடி பிடிக்க அனுமதி வழங்கப்படுகிறது. அன்று குரல் கொடுத்து அழ முடிந்ததே அன்றி எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில் இல்லை.

அவனை வேண்டிக் கொண்டனர். “இன்று ஒருநாள் தங்கிச் செல்க; இது எம் வேண்டுகோள்” என்று அவன்முன் வைத்தனர். பிரிவு உபசாரம் வழங்க அல்ல; பிரிய மனம் இல்லாத நிலை.

அவர்கள் வேண்டுகோளைக் கேட்டான். அவர்கள் கண்ணீரைக் கண்டான். மற்றும் தன் மனையாளைப் பார்த்தான். அவளுக்கு அது இதம் தரும் என்று எண்ணினான். மாற்றத்துக்கு இடைவெளி அமையுமே என்று அதற்கு இசைந்தான்.

நளன் நாட்டு மக்களோடு தங்குகிறான் என்பதைப் புட்கரன் கேட்டான். ஆட்சி அவன் கையில்; மக்கள் பழையவனை மதிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

“போகட்டுமே இருந்து” என்று எண்ணவில்லை. “ஒருநாள் தானே” என்று விட்டிருக்கலாம். இரக்கம்