பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

69



என்பது அரக்கனிடம் இருப்பது இல்லை. இரக்கம் என்பதுஅவன் செயலில் இடம் பெறவில்லை.

“இந்த மக்கள் நன்றி கெட்டவர்கள்; ஆள்பவன் யான்; அநாதை அவன்; அவன் பக்கம் இவர்கள் சாய்கின்றனர்"என்று கூறினான். அவனால் பொறுக்க இயல வில்லை.

“முரசு அறைக"என்றான். விழுந்துபட்ட அரசனுக்கு விருந்து தர யாராவது முன் வந்தால் அவர்கள் தலை அவர்கள் இழக்க வேண்டியதுதான். சிரசு நீக்கம் செய்யப் படும்” என்று அறிவித்தான்.

நாட்டுப்பற்று உடைய மக்கள் உயிர்ப் பற்று உடையவர்கள் ஆயினர்; முதலில் தம்மைக் காத்துக் கொள்வது முதற்கடமை என்று முடிவு செய்தனர்.

அழுவதை நிறுத்தினர்; அரசன் இருந்த இடம் நோக்கியும் அவர்கள் கால் நீட்டிப் படுக்கவில்லை. அவன் அந்நியன் ஆயினான்.

“மக்களைக் கூறிப் பயன் இல்லை; தவறு என்னுடையது தான். அவசரப்பட்டு அறிவு இழந்தேன். பாதை தவறினேன்; என்னால் என் குடி மக்களுக்கு இக்கட்டு வந்தது; இனி இங்கு இருப்பதால் அவர்களுக்குக் கேடு வரும். கேடு வருவதற்கு முன் புதிய இடம் தேடுவதே தக்கது” என்று அரசு எல்லையைக் கடந்தான். வாயிலை விட்டு வெளியேறினான்.

“கொற்றவன் பால் செல்வோர் இருந்தால் அவர் களைக் கொல்லுக” என்று பறை அறிவித்தான். அதுகேட்டு ஊரே இழவுபட்டதுபோல் அவலத்துள் ஆழ்ந்தனர்.

வீடுகளில் குழந்தைகள் பால் உண்ண மறுத்தனர்; ஏதோ சாவு விழுந்தது போல் அவ்வீடுகள் விளங்கின.