பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

புகழேந்தி நளன் கதை



வளரட்டும்; பிறகு அழைத்துக் கொள்ளலாம்” என்று கூறினான்.

மக்களை அனுப்புவதற்கு அவள் மறுப்புத் தெரிவிக்க வில்லை. விட்டுப் பிரியாத கணவனைத் தனித்துவிட அவள் விரும்பவில்லை.

சுகத்தில் பங்கு கொண்ட அவள் துயரத்தில் பங்கு கொள்ள விரும்பினாள்.

அன்று சீதை எண்ணினாள். இராமன் தனிமைக்கு வருந்தினாள்.

“அருந்தும் மெல் அடகு யார் இட அருந்தும்” என்று நினைத்துப் பார்த்தாள்.

“விருந்து கண்டபோது அவன் எப்படி வருந்துவான்” என்றும் எண்ணிப் பார்த்தாள்.

உற்ற துணைவி அவள்; அவனைத் தனியேவிட விரும்பவில்லை.

“மனைவிக்குக் கணவன்தான் முதன்மை; பிள்ளைகளை யார் வேண்டுமானாலும் கவனித்துக் கொள்வார்கள். மனைவி ஒருத்திதான் கணவனுக்கு இதம் அளிக்க இயலும். அவள் ஒருத்திதான் துணையாக இருக்க முடியும். நிலவு இல்லாத வானம் ஒளி பெறாது. நீ இல்லாமல் யான் வாழ முடியாது” என்று கூறினாள்.

இந்தக் கருத்தைச் சிறிது மிகைப்படுத்திக் கூறினாள்.

“மக்களை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும். காதலனை இழந்தால் மனைவி அவனைப் பெற முடியாது"என்று கூறினாள்.

அதற்கு அவனால் மறுப்புக் கூறமுடியவில்லை. என்றாலும் மக்கள் செல்வம் மதிப்பு உடையது. அவர்களுக்கு