பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

73



எந்தத் துன்பமும் வராமல் காப்பது நம் கடமை; பொறுப்பு என்று கூறினான்.

“மக்கள் பேறு உயரிய செல்வம்; அதற்கு நிகரானது வேறு எதுவும் இருக்க முடியாது” என்று கூறினான்.

“பொன்னைப் பெற முடியும்; புகழை ஈட்ட முடியும். பெருநிதிச் செல்வராயினும் சரி; புகழ்மிக்க சான்றோராயினும் சரி; அவர்களுக்குக் குழந்தை இல்லை என்றால் அவர்கள் வாழ்வு பயனற்றது. எந்த உடைமையும் இதற்கு ஈடாகாது” என்றும் கூறினான். கலைகள் தரும் இன்பத்தை விட இந்த இளஞ்சிறுவர்கள் மழலைச் சொல் கேட்க இனிது என்றும் கூறினான்.

அதனால் இந்தச் சிறுவரையாவது பெருமைக்கு உரிய திருநகரில் சேர்ப்பது நம் கடமை; அதைச் செய்வோம் என்று கூறினான்.

சிந்தித்தாள்; சீர்மிகு கருத்தினை உரைத்தாள். “விதி நம்மைச் சதி செய்து விட்டது. சூதினால் பொருள் இழக்க நேர்ந்தது. இதை நாம் எதிர்பார்க்கவில்லை. இழப்பு அதனை ஈடு செய்து கொள்ளலாம். அரச வாழ்வு நம்மை விட்டு அகலவில்லை; என் தந்தை இருக்கிறார்; பிறந்த மண் உள்ளது. திறந்த கதவு அங்கு உள்ளது. பிள்ளைகளோடு நாம் அனைவரும் அங்குச் செல்வோம். மறுக்காது ஏற்க” என்று கேட்டாள். மெல்ல எடுத்துக் கூறினாள்.

பாரதப் போர் வராமல் காக்க வழி சொன்னான் சகாதேவன். திரெளபதிக்கு மொட்டை அடித்துவிட்டால் பாரதப் போரை வராமல் தடுத்து விடலாம் என்று கூறினான்.

பாரதப் போர் தவிர்க்க வழியைச் சகாதேவன் கூறினான். துன்பத்தினின்று விடுபடத் தமயந்தி இவ்வாறு கூறினாள். “நாம் ஏன் இப்படிக் கஷ்டப்பட வேண்டும்?