பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

புகழேந்தி நளன் கதை



மான்பிடிக்கச் சொல்லி மாலை வற்புறுத்தினாள் மங்கை ஒருத்தி; இது இராம காதை. அதேபோல் இங்கே இவள் பொன் பறவையைப் பிடித்துத்தா என்று மழலை மொழி பேசி அவனைக் குழைய வைத்தாள்.

காட்டில் இதுவாவது செய்யக் கூடாதா என்று எண்ணினான். அன்னத்தைப் பிடித்து வரச் சொன்னாள். அதனால் அவனுக்கு நன்மையே கிட்டியது. இந்தப் பொன் நிறத்துப் பறவையைப் பற்றித்தர விரும்பினான்.

அதுமிகவும் எளிதில் சிக்கிவிடும் என்று நினைத்தான். அது அவனிடம் ஆட்டம் காட்டியது; ஒட்டம் பிடித்தது; இவன் விடாது நாட்டம் செலுத்தினான். கைக்குள் படுவது போல் அவனுக்குச் சாடை காட்டியது. சுழன்று ஒடியது. இளைத்துக் களைத்ததுபோல் இருந்த அதனை வளைத்துப் பிடிக்க அருகில் சென்றான்.

அதனை வளைத்துப் பிடிக்க வலை ஒன்று தேவைப்பட்டது. பறவை வேட்டுவன் ஆக விரும்பினான். வலை வீச அவன் வடிவுமிக்க துகில் தேவை என்பதை அறிந்தான். அவளைப் பார்த்தான்.

“பங்கிட்டுக் கொள்வோம்” என்றான்.

உமை ஒரு பாகத்தாள்; சிவன் பாதி ஒருத்திக்குத் தந்தான். பாதியில் இவன் நின்றான். அந்த உருவம் அவன் கண்முன் நின்றது.

ஒற்றைத் துகில் போதும். மற்றையதைக் கொண்டு உற்ற அந்தப் பறவையைப் பிடித்து விடலாம் என்று கூறினான்.

தான் கட்டி இருந்த வேட்டியைக் கையில் கொண்டான். தன்னை மறைக்க அவள் முந்தானையைக் கேட்டான். ஒரே புடவை; இருவருக்கும் உடுத்தும் துகில்