பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

புகழேந்தி நளன் கதை




“நாட்டை இழக்கச் செய்தாய்; காட்டிலும் நிம்மதியாக வாழவிடவில்லை. இது மிகவும் கொடிது” என்று கூறினாள்.

“முதலில் இந்த இடத்தை விட்டு அகல்வோம்"என்று அவனிடம் முறையிட்டாள்.

“தெய்வமே தீமை இழைத்தால் நாம் என்ன செய்ய முடியும்” என்று கூறி வருந்தினாள். அடுத்து என்ன நடக்கும் என்று அஞ்சினாள்.

எங்காவது தங்க வேண்டும். என்ன செய்வது என்று கவலை கொண்டனர். அதற்குள் பொழுதும் சாய்ந்தது. பேய்க்கும் வழி தோன்றாத இரவு வந்து சேர்ந்தது.

இரவு தங்குவதற்கு ஒரு கூரை தேவைப்பட்டது. வன விலங்குகள் அவை அரசு புரியும் இடம். அரவுகள் ஊர்ந்து செல்லும் இடுக்குகள், முள்புதர்கள்; எங்கே உறங்குவது?

மண்டபங்கள் எழுப்பி மாநிலத்தை ஆண்ட அரசன் யாரோ ஒருவன்; அங்கு ஒரு பாழ் மண்டபம் அவர் களுக்காகவே விட்டு வைத்தான். இடிந்து விழுந்து சில தூண்கள் துணையாகத் தாக்குப் பிடித்துக் கொண்டு விழாமல் இருந்தது. இடி பாடுகள் கொண்ட கற்களால் எழுப்பிய கட்டிடம்; ‘கூரை’ இருந்தது மழை வந்தால் தடுப்பதைத் தன் கடமை என்று கருதுவதை மறந்து விட்டது. வெடிப்புகள் காலத்தின் வடுக்கள்; மானம் மறைக்கக் கந்தல் ஆடையும் சில சமயம் உதவுகிறது; வானத்தை மறைக்க இந்தப் பாழ் மண்டபம் நிலைத்து நின்றது.

“இந்த மண்டபங்கள் ஏன் பாழ்பட்டுக்கிடக்கின்றன?” என்று கேட்டாள்.

“படிப்பாரற்று நூல்கள் சில செல்லுக்கு இரையாகின்றன; அதுபோலத்தான் இவையும்’ என்றான்.