பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

79



“மனித சஞ்சாரம் இல்லாவிட்டால் அனைத்தும் பாழ்தான். மானுடம் மதித்தால்தான் எதுவும் நிலைத்து நிற்கும்” என்றான்.

“இந்த மண்டபங்கள் அரசர்கள் வாழ்ந்த பழைய சின்னங்கள்; இங்கே இருந்துதான் அவர்கள் பீடத்தில் இருந்து ஆட்சி செய்திருப்பார்கள்” என்றான்.

“வரலாறு இது அதன் தனிச் சிறப்பு” என்று அதன் பெருமையைப் பேசினான்.

அவர்கள் கண்முன் இந்த அரசர்கள் கண்ட போர்க் களங்கள் நின்றன. இவர்கள் மானம் வீரம் இவற்றைப் பேசிப் பகைமை கொண்டனர். தம்மைத் தாம் மாய்த்துக் கொண்ட நினைவுகள் நிழலாடின.

“மனிதன் அவன் தன்னை நேசிக்க மறந்து விட்டதால் அதன் விளைவால் நேர்ந்த நாசம் இது” என்று கூறினான்.

இதைப் பற்றி எல்லாம் கேட்டுக் கொள்ள அவளுக்குப் பொழுது இல்லை; எங்கே தங்குவது? இரவு எப்படிக் கழிப்பது என்ற சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அந்த மண்டபம் அந்த இரவுக்கு அவர்களுக்கு நட்சத்திர விடுதியாக அமைந்தது. வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதை அங்கிருந்து காண முடிந்தது. அதனால் அதனை ‘நட்சத்திர விடுதி’ என்று கூறினாள். அங்கு அவளோடு சேர்ந்து நகைத்தான்.

தெய்வ கீதம் கேட்ட செவிகள்; ‘மகர யாழ்’ ஒலி கேட்டவள் அவள்.

“இசை பாடுவோர் இல்லையே” என்று கேட்டாள்.

பழக்கம்; இது புதிய சூழல்; உறக்கம் அவள் காண முடியவில்லை.