பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

புகழேந்தி நளன் கதை



ஏதோ புதிய நாதம் கேட்டது. இது என்ன புதிய ‘பண்’ என்றாள்.

“கொசு அது ரீங்காரம் செய்கிறது” என்றாள்.

சில இசைப் பாடகர்கள் பாட்டை மறந்து விட்டுப் பண்ணில் லயம் காட்டுவது அவள் நினைவுக்கு வந்தது.

தேர்ந்த இசை கேட்ட செவிகள் இப்பொழுது இந்தக் கொடுமைக்கு ஆளாக நேர்ந்ததே என்று வருந்தினாள்.

அவள் தொலைக்காட்சி சங்கீதங்கள்; கூத்துகள் கண்டது இல்லை; கண்டிருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டாள். பழகிப் போய் இருக்கும்.

பல இசைகளைக் கேட்டுப் பழகி விட்டால் எல்லாம். இசை மயம் என்பதை அறிந்து கொள்ள முடியும். அவளுக்கு இது புது அனுபவம்.

மகர யாழ் கேட்ட தெய்வக் காதுகள் இந்தக் கொசுவின் சிள்ளொலி கேட்க நேர்ந்ததே என்று வருந்தினாள்.

அவனுக்கு என்ன கூறுவது என்பது தெரியவில்லை. ஆறுதல் கூற அவனுக்குக் கிடைத்தது இதுதான் “பழைய வினை"என்றான்.

“விதி விதிப்பதை யாரும் கடக்க இயலாது” என்று ஆறுதல் கூறினான்.

பாழ் மண்டபம் அதைப் பார்க்கும்தோறும் அவள் ஆழ் துயரில் அழுந்தினாள். நேற்று அவன் நிலை யாது? இன்று அவன் நிலை யாது? மாளிகையில் அவன் ஆளுமை அதை நினைத்துப் பார்த்தாள். மலர்ப் படுக்கை உடைய பள்ளி அறை அங்கே; இங்கே இடிப்பட்ட கற்கள் விரிக்கப் பட்ட அறை; கற்கள்மிக்க அறை. பள்ளியறையில்