பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

81



வெளியே எத்தனை காவல்! இங்கே இது கல்லால் அமைந்த கல்லறை.

அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்சக் காவல் காத்து நின்றனன் இராமனின் தம்பி இலக்குவன்.

அந்தக் காட்டில் பன்னக சாலையின் வெளியே காவல் காத்திருந்தான் காகுத்தனின் இளவல் இலக்குவன்.

தரையில் படுத்துத் தலையணையின்றித் தனித்துத் தமயந்தி உறங்கும் காட்சியைக் கண்டான். அதைப் பார்க்கும் தோறும் அவன் உள்ளம் குமுறினான்; இந்த நிலைக்குத் தான்தானே காரணம் என்று புழுங்கினான். அவன் இவள் நிலை கண்டு கலங்கினான்.

அவள் அவனைப் பார்த்தாள். இருந்த புடவையும் பாதியாயிற்று. அது அவனுக்கு ஆடை ஆயிற்று. விரித்துப் படுக்கத் தன் முந்தானையாவது பிரித்துத் தரலாம் என்றால் அது ஏற்கெனவே பறிபோய் விட்டது. அவனுக்குக் கீழ் விரிக்க எந்தத் துப்பட்டியும் இல்லை. அணையில்லை; தான்தான் உண்டு; அவள் கை, அவள் கால்கள் அவனுக்குச் சாய்வு அணைகள் ஆயின. அதை நினைத்து அவள் கண்ணீர் சோர்ந்தாள்.

வீமன் ஒரே மகள்; குலத்துக்கு அவள் தீபமாக விளங்கியவள்; தாமம் தனக்குச் சூட்டியவள்.

விண்ணவரும் பெற வந்த மாலையை இவனுக்கு அளித்தாள். அவள் தரையே படுக்கையாக அவள் துயில நேர்ந்ததே என்று வருந்தினான்.

இந்த நினைவுகள் அவனை அலைக்கழித்தன. இந்த நிலை தொடரத்தான் வேண்டுமா? மண்டபங்கள் எத்தனை கிடைக்கும்? வழியில் இனி எங்கே தங்குவது? சோற்றுக்கு