பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

83



அவளுக்கு விடுதலை என்று எண்ணினான். ‘விடுதலை விடுதலை’ என்று அவன் வாய் முணுமுணுத்தது.

இது கொடுமை; கணவனுக்காக அவன் மனைவி துயர்படுவது என்பது கொடுமை என்பதை உணர்ந்தான். அவள் சுகப்படட்டும் என்று முடிவுக்கு வந்தான்.

புத்தன் தன் மனைவியை விட்டுப் பிரிந்தான். அவன் பட்ட வேதனை அதற்கு ஈடே கூறமுடியாது. வெளியே செல்வான்; மறுபடியும் வண்ண நிலவை அவள் முகத்தில் காண்பான். கவலையற்ற அந்த முகம் சலனமற்ற வாழ்க்கை; துணிந்து பிரிந்தான். அவன் தேவன் ஆயினான்; உலகுக்கு ஒளி கூட்டினான்.

நளன் தமயந்தியைப் பிரிந்தான். அவன் பட்ட வேதனை எழுத்தில் எழுத முடியாது. மொழி உதவும் நிலையில் இல்லை. ஒருகால் ஏகுவான். மறுமுறை வந்து மீள்வான்; அலை மோதினான்.

அவள் விழித்து எழுவதன் முன் கழித்து விடுவது என்று துணிந்தான். போயினான்; நடந்தான்; நடந்து கொண்டே இருந்தான். அந்தப் பாழ் மண்டபத்தில் நடு இரவில் கொடிய கானகத்தில் அவளைத் தனியே விட்டுச் சென்றான். உண்மையில் இதைவிடக் கொடுமை வேறு இருக்க முடியாது. ஏன் இவன் புத்தி தடுமாறியது? ஏன் இந்த முடிவுக்கு வந்தான். அவனுக்கே கிடைக்காத விடை அது.

தெய்வங்களிடம் முறையிட்டான். “வீமன் தன் மகளை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று செயலற்றுப் பேசினான்.

அரசியலில் முடிவு எடுப்பதற்குக்கூட தெய்வங்களை நம்புகின்றனர் ஒரு சிலர்; காரணம்? அவர்களுக்குத் தனிப்பட்டவர்கள் மீது உள்ள பற்றுகள்; நெறியில்