பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

புகழேந்தி நளன் கதை



நம்பிக்கை இல்லாதவர்கள் தெய்வத்திடம் முறையிடுவது வழக்கம்.

தன்னம்பிக்கை அவன் இழந்துவிட்டான். தான் இருந்து அவளுக்கு உதவ முடியாது என்பதை அறிந்தான். தான் இல்லாமல் இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்று நினைத்தான். அவளை வீமன் மகள் என்று முத்திரை இட்டு அவளை நித்திரையில் பிரிந்தான். “காதல் அன்பு உடையவளைக் காரிருளில் கைவிட்டு இன்று யாரோபோல் நீங்குகின்றேன் யான்” என்று கூறினான்.

முதியவள் அல்லள் அவள். பதி அடைந்து செல்வதற்கு. இளநங்கை அவளை விட்டுச் சென்றால் அவளுக்குப் பாதுகாப்பு இல்லை; தண்ணளியான் என்று பேசப்பட்டவன் இன்று அருள் நீங்கிச் செல்கின்றான். உயிர் போன்றவள்; அவளை எப்படித்தான் விட்டுச் செல்ல மனம் வந்தது! கசப்பு ஏற்பட்டு வசவு பேசி அவளை விட்டு அவன் நீங்கவில்லை; ஈர்ப்பு அவள் வார்ப்பு; அந்த நிலையில் அவளை விட்டுச் சென்றான். இடையிருளில் கானகத்தே அவளை விட்டுச் சென்றான். இது வியப்புக்கு உரியதுதான்.

இவன் மட்டும் எந்த ஊறும் இல்லாமல் ஏகினான் என்று கூற இயலாது. கூர் இருளில் நகம் சிதைய நடந்தான்; பரல் கற்கள் அவன் நகத்தைச் சிதைத்தன. அரச மகள் பட்டத்து அரசி அவளை விட்டுவிட்டு வெங்கானகத்தில் மனம் வெந்து சென்றான். இது அவன் நிலை.

விழித்து எழுந்தாள், கைகளால் தடவினாள்; அடுத்து இருந்தவன் அங்குப் படுத்துக் கிடந்தவன். உடுத்த துகிலோடு வெளி ஏறினான்.

அங்குத் தேடினாள்; அவன் அவள் கையகப் படவில்லை; ‘'எங்கே சென்றாய்?” என்று வாய்விட்டுக்