பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

புகழேந்தி நளன் கதை



அவளிடம் பேசாமல் எப்படிச் செல்வது? பேசுவதற்கு அவனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

தனித்து ஒரு பெண் இருக்கிறாள் என்றால் அவள் பின்னால் ஒரு கதை இருக்கத்தான் செய்யும். அதைக் கேட்டு அறிவதில் அவனுக்கு ஒரு சிறு விருப்பு; மற்றும் தன்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்ற நல்ல எண்ணமும்; அதனால் அவளிடம் பேச முற்பட்டான்.

அவளும் அவனை நாடிவந்தாள். கட்டுச் சோறு இருக்கும். அதைக் கேட்டுப் பெறலாம் என்பதற்காக அல்ல; வழித்துணைக்கு அவ்வணிகன் உதவுவான் என்பதால் அவனிடம் நெருங்கினாள்.

புதரில் சிக்கிக் கிழிபட்ட புடவை; சிதறிக் கிடந்த மயிர்முடி; உடம்பு எல்லாம் புழுதி. அழுது அழுது வற்றிப் போன அவள் கண்கள்; அழுக்குப் படிந்த தோற்றம்; ஏதோ ஒரு இடரிலிருந்து தப்பித்து வந்தவள் போல் காணப் பட்டாள்.

அவன் புரிந்து கொண்டான்; வாலிப மங்கை; எவனோ வம்புக்கு இழுத்து இருக்கிறான்; தப்பி வந்து இருக்கிறாள் என்பதை அறிந்தான்.

அவளிடம் என்ன பேசுவது? பேசுவதற்கா கேள்விகள் இல்லை.

“நீ யார்? எந்த ஊர்? சாதி, குலம் அவள் சரித்திரம் இவற்றைப் பற்றிக் கேட்டான். “எக்குலத்தாய்? யார் மடந்தை? யாது உன் ஊர்? யாது உன் பேர்? நெக்கு உருகி நீ இங்கு வந்து சேர்வதற்குக் காரணம் யாது? இவற்றை எடுத்துக் கூறுக” என்ற வினாக்கள் தொடுத்தான்.

தேவையான விடையை அவள் அவனுக்குத் தந்தாள்; “விதி அதன் விளைவு என்று தொடங்கினாள். அதில் பல செய்திகள் அடங்கின. “மன்னவன் என்னைத் தன்னந்