பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

95



அழுதுஅழுது அந்த இடத்தை அவர்கள் அவலப் படுத்தினர். தமயந்தி அழ அந்தணனைத் தொழ சேதி யரசியும் ஆறுதல் கூறமுடியாத நிலையை அடைந்தாள்.

கணவனைக் கண்டு எடுத்து அவனை அவளோடு சேர்ப்பது என்று கொண்டிருந்தாள். இனி அவள்தன் மக்களைப் பார்த்தாவது மனம் தேறட்டும் என்று நினைத்தாள். சேதி அரசனும் அதுவே தக்கது என்று அறிவித்தான்.

விதி பிடர் பிடித்து உந்த அவர்கள் வாழ்க்கை சிதைந்தது. இனி அவள் தந்தைபதிக்குச் செல்வதே தக்கது என்று அவ் அந்தணனோடு அவளைச் சேர்த்து அனுப்பி வைத்தனர்.

ஊரவர் திரண்டனர். படம் எடுக்க வந்த கூட்டம் அதை முடித்துக் கொண்டு திரும்புவது போல் அவள் செயற்பாடு இருந்தது. அவளை வழி அனுப்ப ஊர்த் தொண்டு கிழவர்களைத் தவிர குண்டு மனிதர்கள் வந்து கூடினர். ஆடவரும் மகளிரும் திரளாக நின்று வழி அனுப்பினர். அவள் சோகக் கதை அதைத் தொடர்ந்து பேசினர்.

அவள் அனுபவங்கள் அவள் உள்ளத்தை நிரப்பின. அன்பும் பாசமும் பரிவும் கொண்ட ஊர் மக்களை அவள் நினைத்துப் பார்த்தாள். அவர்கள் காட்டிய பாசத்தை அவளால் மறக்க முடியவில்லை. விதி காட்டும் வழி என்று வீதி வழியே நடந்து சென்றாள். நகரத்தவர் அவளை வழி அனுப்பி வைத்தனர். அவளை வழி அனுப்ப நிறைந்த கூட்டம் நிலை கொள்ளவில்லை. கோயில், அந்தப்புரம் வாயில் எங்கும் மக்கள் நிறைந்தனர்; “அவள் மக்களையும் கைவிட்டுக் கணவனுடன் காட்டுக்குச் சென்ற உத்தமி” என்று அவளைப் பற்றிப் பேசினர் “மக்களைவிட கணவனை மதித்தவள்’’ என்று பேசினர்.