பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ரா. சீனிவாசன்

97



அவன் முதல் சந்திப்பு அவனைப் பரோபகாரியாக ஆக்கியது.

தீயவர்க்கும் நன்மை செய்யும் சந்திப்பு ஏற்பட்டது.

காட்டுத் தீயில் அரசு அரவு ஒன்று அகப்பட்டுக் கொண்டது. நளனைக் கண்டதும் அவ் அரவு “மன்னா உனக்கு அபயம்” என்று அரற்றியது. வாய்விட்டுக் கத்தியது. கூவி அழைத்தது.

‘அபயம்’ என்ற குரல் கேட்டு ஒசை வந்த திசை நோக்கிச் சென்றான்.

நெருப்பில் அந்தப் பாம்பு சிக்கி அவதிப்பட்டது; யார் எது என்பதைப் பற்றி அவன் சிந்திக்க வில்லை. நல்லவனா கெட்டவனா என்ற பேதம் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. நஞ்சு உடைய நாகம் என்று தெரிந்தும் அதனைக் காக்கத் துணிந்தான். நெருப்பினின்று அதனை எடுக்க விரைந்தான்.

பெரு நெருப்பு; அலைகடல் போல் பரவிய வண்ணம் இருந்தது. “செந்தீ” அது சுடாமல் இருந்தால் பார்க்கத் தக்கதுதான். அது சுட்டு எரிப்பதால் அதனைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டிய தேவை ஏற்பட்டது.

நெருப்புக் கடவுள் இவன் விருப்புக்கு உதவ வரம் தந்திருந்தான். வேண்டும்போது உதவுவேன் என்று கூறி இருந்தான். தாண்டும் வழி அவனுக்குத் தேவைப்பட்டது. “சற்றே அடங்கி இரு பிள்ளாய்! அந்த அரவினை யான் காத்தல் வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். கடல் அலைகள் அடங்குவதுபோல் நெருப்பு அடங்கியது; விலகியது.

அரவு அவனுடன் உரையாடியது: “ஐயா என்னை இங்கு இருந்து எடுத்துவிடு. வேதமுனிவன் இட்ட சாபத்தால் இந்த ஏதம் எனக்கு நிகழ்ந்தது; இந்தக் கொடிய