புலவர் என்.வி. கலைமணி 33
வேண்டுமானால், வால்மீகி இராமாயணத்தைப் படித்துப் பார்! மேற்கூறிய ஒழுக்கக் கேடர்களாக அவர் பாடியிருக்கிறாரா இல்லையா என்று உணர்!
செந்நாப் போதார், தனது நூலின் மூலக் கரு உருவைத் தன்னுடைய அறிவிலிருந்தே சிந்தித்துப் பெற்றவர் அநுபவ ஊற்று:
அதன் வழியாக மனிதத்திற்கு நீதி நூலைத் தயாரித்து - அவனி வாழ் இனங்களும் - மக்களும் - நாடுகளும் நன்கு வாழ்ந்திட, அவ்வவ்வ மொழியின் கரங்களிலே தவழவிட்டத் தன்னிகரற்ற மேதை!
ஆனால், கம்பன் ஓர் காவியக் கர்த்தா. அவன் எழுதியது இராமாயணப் பாத்திரப் படைப்புகளைக் கொண்ட இராம காதை:
கம்ப இராமாயணம் வேதமல்ல! அது ஒர் இதிகாச இலக்கியம்! தமிழர்கள் கண்டிராத கற்பனை கலந்த தேவ வரலாறு கூறும் ஒரு காவியம்:
வேத நூல்களையே விமரிசிக்கின்ற காலம் அல்லவா இது? இதற்கிடையே கம்பனானால் என்ன? வேறு எந்த கொம்பனானால் என்ன?
கிறித்துவ மக்களின் பைபிள் வேதத்தையே மிகக் கடுமையான விமரிசனத்திற்கு ஆளாக்கியவர் - இராபர்ட் கிரீன் இங்கர்சால்!
இயேசு நாதரையே A Good Man என்று அவர் பாராட்டினார். ஆனால், அவரைக் கடவுள் என்பதை ஏற்க மறுத்தார். இந்தியாவில் இராஜாராம் மோகன்ராயும் போராடி மறுத்தார்.
கிரேக்க நாட்டுக் கடவுள் தத்துவங்களையே அக்கு வேறு ஆணி வேறாக விமரிசனம் செய்தவர் - சாக்ரடீஸ்!
இங்கிலாந்து TLGు ஷேக்ஸ்பியரை விமர்சிப்பதைப் போல, கம்பனைத் தமிழ் நாட்டிலே விமர்சிக்கின்ற நேரத்தில், கறிவேப்பிலையாக மிதந்ததே கம்பரசம்! அவ்வளவுதான்்!