புலவர் என்.வி. கலைமணி 75
- பிறர் நகைக்கப் பெற்றாள், ஏற்றோமற் றெற்று” என்று ஒளவை மூதாட்டி மும்முறை கூறிய பாடலடி - உமக்கும் பொருந்துமா பொருந்தாதா? நீரே கூறுமய்யா! - கவிஞரே!
உமக்கும் வீரத்திற்கும் என்னையா - ஒட்டு - உறவு? சம்பந்தம்?
'ஐம்பெரும் காப்பியத்திற்கு கருணாநிதியை விட அத்தாரிட்டி யார் இருக்கிறார்கள்!' - என்று, கேலி பேசி பொறுமும் அழுக்காறே!
ஐம்பெரும் காப்பியத்திற்கு எவனுமே அத்தாரிட்டி இல்லை! ஒரு தமிழ்க் காப்பியத்துள் ஒருவன் தனது தலையை விட்டுவிட்டானானால், அவன் செத்த பின்பும்கூட - அதன் ஆழத்தைக் கண்டுதான்் மறைந்தான்் என்று, எவனாலும் அறுதியிட்டுக் கூறமுடியாதே!
அவ்வளவு இலக்கியச் செறிவுள்ள காப்பியங்கள், காவியங்கள், செய்யுட்கள், பாடல்கள் ஏராளம் உண்டல்லவா
- தமிழில்? தெரியாததா இது உமக்கு?
'அத்தாரிட்டி யார்”, என்று நீர் கேட்பதைப் பார்த்தால், கிரேக்கப் பேரழகி கிளியோபாட்ரா போதையூட்டும் திராட்சைப் பழரசக் கோப்பைகளிலே தமிழ் நாட்டுக் கொற்கை முத்துக்களைப் போட்டுக் கலக்கிக் குடித்தாளாமே
அதைப்போல - கண்ணதாசனார் என்னமோ, தமிழ்க் காப்பியங்களை எல்லாம், ஒவ்வொன்றாகக் கரைத்துக் குடித்தவரைப் போலக் கேட்டுள்ளாரே! உமக்கு ஏனய்யா இந்தக் கேள்வி தேவைதான்ா!
புலவர்கள் என்றால் - தமிழ், தமிழ் என்றால் புலவர்கள் என்று வாழும் நாடு - தமிழ் நாடு
எந்தப் புலவரும், மற்றொரு புலவரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஏசியவரல்லன் - உம்மைப்போல்!
கவிக்குல மேதைகளான ஒட்டக் கூத்தர், புகழேந்திகள் அரசியல் அழுக்காற்றுச் சம்பவங்கள் கூட உம்மைப் போல அற்பமாக அமையவில்லையே!