பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

தி.மு.க. பாதி - காங்கிரஸ் பாதி என்று அரசியல் பதிகம் ஏதாவது பாடி நிலை பெற்றவரா திரு. கவிஞர் கண்ணதாசன்?

தனித் தமிழ்த் தந்தை திரு. மறைமலையடிகளாரிடம் தமிழ் கற்ற மாணவ மேதைகளான நாவலர் சோமசுந்தர பாரதியார், திருப்புகழ் மணி டி.எம். கிருஷ்ணசாமி ஐயர், இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் டி.எஸ். வையாபுரி பிள்ளை, சி.என். முத்துரங்க முதலியார், முன்னாள் முதலமைச் சர் டாக்டர் சுப்பராயன், பெரும்புலவர் இளவழகனார் போல, திரு. கவிஞர் கண்ணதாசனும் ஓரிருவரையாவது தனது புலமையால் புலமை வாரிசுகளை உருவாக்கிக் கொண்டவரா?

சினிமா கவிஞன் என்ற சிற்றின்பம் ஒன்றை அனுபவித் தவரே தவிர, பெரும் புலவர்களைப் பேடி, அலி என்று கண்ட படி ஏசி எழுதிட - என்ன தகுதி பெற்றிருக்கிறார் திரு. கண்ணதாசன்?

'தமிழ், என் வீடு தேடி வந்து என் எதிரே நிற்பதைக் கண்டு கொள்ளாத பாவியாகி விட்டேனே! தங்களையா அலட்சியப் படுத்தினேன்? தமிழையல்லவா அலட்சியப்படுத்தி விட்டேன்?”

- என்று 4,000 விருத்தப் பாக்களால் இரட்சண்ய யாத்ரிகம் என்ற காவியத்தை எழுதிய பெரும்புலவர் எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை அவர்களைக் கட்டித் தழுவிக் கண்ணிர் விட்ட, புலமை மேதை மாயூரம் வேத நாயகம் பிள்ளை எங்கே? சினிமா கவிஞரான திரு. கண்ணதாசன் எங்கே?

புலமை ஞானி கிருஷ்ணபிள்ளை எழுதிய அந்த நூலை மேலோட்டமாகப் புரட்டிப் பார்த்து, 'கம்பரய்யா நீர்-கம்பர்' என்று கை கூப்பி வணங்கிப் பாராட்டிய மேதை மனோன் மணியம் சுந்தரம் பிள்ளை எங்கே? இந்த மயக்கக் கவிஞரான திரு. கண்ணதாசன் எங்கே?

தமிழ் பெருங்கடலாக விளங்கிய யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் பிரான் அவர்களை, பீட்டர் பெர்சிவல் என்ற அவரது பள்ளி உரிமையாளர், ஆங்கில பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்துத் தருமாறு கேட்டுக் கொண்ட போது, பைபிள்