பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதயத்தில் ஈட்டியைப் போல்
பாயக் கூடிய கவிதையை
இன்னும் நான் எழுதவில்லை.

 



லார்கா
(1898–1936)


நான்-
கொலை செய்யப்பட்டதை
உணர்ந்தேன்

அவர்கள். . .
உணவு விடுதிகளிலும்
இடுகாடுகளிலும்
தேவாலயங்களிலும்
என்னைத் தேடினர்.

என்-
தங்கப் பற்களைக்
கவர்ந்து செல்வதற்காக
மூன்று எலும்புக் கூடுகளைப்
புதை குழிகளிலிருந்து
தோண்டிப் பார்த்தனர்.

அவர்களால்-
என்னைக் கண்டுபிடிக்க
மூடியவில்லை.

ஃபெடெரிகோ கார்சியா லார்கா, தான் இறப்பதற்கு முன்பாகவே, தன் இறப்பைப் பற்றிப் பாடி வைத்த பாடல் இது. அவன் பாடிவைத்தபடி, அவன் இறப்பும் இயல்பானதாக இல்லை; கொலை செய்யப்பட்டான். கொலை செய்யப்பட்ட பிறகு அவன் உடம்பைப் பற்றிய தடயம் எதுவும் கிடைக்கவில்லை.