பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105முருகு சுந்தரம்



அவள் தன்-
ஆடையைக் களைந்தாள்.
கைத் துப்பாக்கியோடு கூடிய
கச்சையை நான் அவிழ்த்தேன்.
அவள் தன்-
நான்கு உள்ளாடைகளையும்
உதறினாள்.

குழல் ரோஜாப்பூக்களும்
சிப்பிகளும் கூட
அவள் மேனியின்
பளபளப்புக்குத் தோற்றுவிடும்.
என் கைபட்டதும்
துள்ளும் மீன்களாக
அவள் தொடைகள்
நழுவி விழுந்தன.
அவற்றுள்-
ஒரு பாதி தணல்!
ஒரு பாதி பனி:

அந்த மோன இரவில்
அழகிய ராஜபாட்டையில்
கம்பீரமான
வெண்புரவியை ஆரோகணித்துக்
கடிவாளம் இல்லாமல்
காலிடுக்கி இல்லாமல்
இன்பச் சவாரி செய்தேன்.

அன்று-
அவள்
சொன்ன வார்த்தைகளை
ஆண்மகனாகிய என்னால்
திருப்பிச் சொல்ல முடியாது.
அவள் பேச்சைக் கேட்டு
விழிப் படைந்தேன்.
முத்தங்களாலும்,
மணலாலும்,
கறைபட்டிருந்த நான்
ஆற்றங் கரையைவிட்டுப்
புறப்பட்டேன்.
கத்திமுனைப் பூக்கள்
காற்றோடு போரிட்டன.

நான் ஒரு-
நாடோடிக் கனவானாகப்
பெருமிதத் தோடு
நடந்து கொண்டேன்.